ADDED : ஆக 02, 2024 05:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆக., 07 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அவரின் காவல் நீட்டிக்கப்படுவது இது 52வது முறையாகும்.
இதற்காக புழல் சிறையில் இருந்த படி படுத்த படுக்கையாக செந்தில்பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது என்ன ஆனது என நீதிபதி கேள்வி எழுப்புகையில், அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவதால் புழல் சிறையில் இருந்தபடி சிகிச்சை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.