sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆசிரியர் வயது வரம்பு நிதியுதவி பெறும் பள்ளிக்கு நீட்டிப்பு

/

ஆசிரியர் வயது வரம்பு நிதியுதவி பெறும் பள்ளிக்கு நீட்டிப்பு

ஆசிரியர் வயது வரம்பு நிதியுதவி பெறும் பள்ளிக்கு நீட்டிப்பு

ஆசிரியர் வயது வரம்பு நிதியுதவி பெறும் பள்ளிக்கு நீட்டிப்பு


ADDED : பிப் 24, 2024 09:22 PM

Google News

ADDED : பிப் 24, 2024 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்திற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு, கடந்த ஆண்டு பொதுப் பிரிவினருக்கு 53; இதர பிரிவினருக்கு 58 என நிர்ணயம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

அதே நடைமுறையை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டித்து, அரசாணை வெளியிடும்படி, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசுக்கு கடிதம் அனுப்பினார். இதை, அரசு பரிசீலனை செய்தது.

பள்ளிக் கல்வித்துறை கீழ் உள்ள அரசு பள்ளிகளில், அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு, நேரடி நியமனங்களுக்கான உச்ச வயது வரம்பை, பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வித் துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்டுஉள்ளார்.






      Dinamalar
      Follow us