sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈ.டி., சிறப்பு பிளீடர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு

/

ஈ.டி., சிறப்பு பிளீடர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு

ஈ.டி., சிறப்பு பிளீடர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு

ஈ.டி., சிறப்பு பிளீடர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு


ADDED : டிச 10, 2024 06:52 AM

Google News

ADDED : டிச 10, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழகம், கேரளா, தெலுங்கானா உட்பட நாடு முழுதும், அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் சிறப்பு பிளீடர்களின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

குஜராத், கர்நாடகா, ஜார்க்கண்ட், டில்லி, என, நாடு முழுதும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளில், அமலாக்கத்துறை சார்பில் 141 வழக்கறிஞர்கள் ஆஜராகி வருகின்றனர்.

இவர்களின் பதவிக்காலத்தை, மத்திய நிதி அமைச்சகம் நீட்டித்துள்ளது. இதன் விபரம், மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு பிளீடர்களாக என்.ரமேஷ், பி.சித்தார்த்தன், சசிகுமார், ரஜினிஷ் பதியில், சிபி விஷ்ணு, என்.விநாயகம், வி.பாரிவள்ளல் ஆகியோர் ஆஜராகி வருகின்றனர்.

இவர்களில் பாரிவள்ளலுக்கு அடுத்த ஆண்டு ஜூலை வரையும், விநாயகத்திற்கு, 2027 ஜூன் வரையும், மற்றவர்களுக்கு 2027 மார்ச் வரையும், பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 முதல் சிறப்பு பிளீடராக உள்ள என்.ரமேஷ், அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாபர் சாதிக் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் ஆஜராகி வருவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us