ADDED : பிப் 02, 2024 11:14 PM
சென்னை:திருச்சி - ஆமதாபாத் சிறப்பு ரயில்களின் சேவை, இந்த மாதம் இறுதி வரை நீட்டித்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் - திருச்சிக்கு வியாழன் தோறும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், வரும் 29ம் தேதி வரையும்; திருச்சி - ஆமதாபாத் இடையே ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், மார்ச் 3 வரையும் நீட்டித்து இயக்கப்படும்.
சிறப்பு ரயில்கள்
குஜராத் மாநிலம் ஓக்ஹாவில் இருந்து வரும் 5, 12, 19, 26ம் தேதிகளில் இரவு 10:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நான்காவது நாளில் காலை 11:45 மணிக்கு மதுரைக்கு வந்தடையும்
மதுரையில் இருந்து வரும் 9, 16, 23, மார்ச் 1ம் தேதிகளில் நள்ளிரவு 1:15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், அடுத்த மூன்றாவது நாளில் காலை 10:20 மணிக்கு ஓக்ஹாவுக்கு செல்லும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

