ADDED : ஜூன் 21, 2025 02:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்:கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு, 48; டி.பார்ம்., படித்துள்ளார். அதே ஊரில், நான்கு ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வருகிறார்.
அவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஊசி போடுதல், தன்னிச்சையாக மருந்து வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார்.
மேலும், கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பார்த்து கூறுதல்; கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களையும் செய்து வந்தார்.
சங்கராபுரம் அரசு தலைமை டாக்டர் ராஜ்மோகன் புகாரில், சேட்டுவை போலீசார் கைது செய்தனர்.

