sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விலை போகாத எலுமிச்சை விரக்தியில் விவசாயிகள்

/

விலை போகாத எலுமிச்சை விரக்தியில் விவசாயிகள்

விலை போகாத எலுமிச்சை விரக்தியில் விவசாயிகள்

விலை போகாத எலுமிச்சை விரக்தியில் விவசாயிகள்


ADDED : ஆக 04, 2025 05:33 AM

Google News

ADDED : ஆக 04, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : எலுமிச்சை பழத்திற்கு உரிய விலை கிடைக்காததால், அவற்றை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல், தேனி, துாத்துக்குடி, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.

பண்டிகை, திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள், கோவில் திரு விழாக்கள், கோடைக் காலங்களில் எலுமிச்சையின் தேவை அதிகரிப்பது வழக்கம். அத்தகைய நேரங்களில் அவற்றின் விலை கூடுதலாக இருக்கும்.

கடந்த மே மாதம், கிலோ எலுமிச்சை பழம், 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதை தொடர்ந்து, படிப்படியாக அதன் விலை குறைந்து வந்தது. ஆடி மாதம் அம்மன் கோவில்களில், திருவிழா, கூழ் வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

தேவை அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தியும் பெருகி உள்ளது. இதனால், விற்பனைக்கு வரும் எலுமிச்சைக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

கோயம்பேடு சந்தையில், கிலோ எலுமிச்சை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விலையில், ஒரு எலுமிச்சை பழம் 15 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது இரண்டு ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லை.

எலுமிச்சைக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால், அவற்றை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

எலுமிச்சை மதிப்பு கூட்டும் ஆலைகள், ஊறுகாய் உற்பத்தி நிறுவனங்கள் வாயிலாக, அவற்றை கொள்முதல் செய்வதற்கு, வேளாண் வணிக பிரிவினர் உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us