ADDED : நவ 21, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்:சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு, காமலாபுரம், பொட்டியபுரம், சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி கிராமங்களில், 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதன் இறுதிக் கட்டமாக இழப்பீடு வழங்க, நிலத்தில் உள்ள வீடு, மரம், பயிர் உள்ளிட்டவற்றை அளவீடு செய்யும் பணியை, நில எடுப்பு தாசில்தார்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
காமலாபுரத்தை முடித்து நேற்று சிக்கனம்பட்டியில் உள்ள நிலங்களை அளக்க, ஓமலுார் போலீசாருடன் தாசில்தார்கள் சென்றனர்.
அப்போது, 'எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது' என தெரிவித்து, விவசாயிகள், அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலீசார், அதிகாரிகள் சமாதானப்படுத்தி, அளவீடு பணியை முடித்துச் சென்றனர்.

