உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 25, 2026 12:42 AM

அ நிறம் | அளவு
சென்னை: ஊரக வாழ்வாதார இயக்கத்தின், அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
காலமுறை ஊதியம், பணிக் காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு, இழப்பீடு, ஊதிய உயர்வு உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
