sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பைக் மீது கார் மோதல்: தந்தை, மகன் பலி

/

பைக் மீது கார் மோதல்: தந்தை, மகன் பலி

பைக் மீது கார் மோதல்: தந்தை, மகன் பலி

பைக் மீது கார் மோதல்: தந்தை, மகன் பலி


ADDED : பிப் 12, 2025 11:19 PM

Google News

ADDED : பிப் 12, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியாகினர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கொங்கராம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை,54; தி.மு.க., கிளைச் செயலாளர். இவரது மகன் தயானந்த் (எ) தயாநிதி,23. சென்னை ,அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஏழுமலை தனது மகன் தயானந்தை சென்னைக்கு ரயிலில் ஏற்றிவிட பைக்கில் விக்கிரவாண்டிக்கு அழைத்து வந்தார். வி.சாலை பகுதியில் உள்ள பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வேகமாக சென்ற 'ஸ்விப்ட்' கார் பைக் மீதுமோதியது.

இதில் தந்தை மகன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

விக்கிரவாண்டி போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ளனர்.

சாலை விபத்தில் தந்தை, மகன் இறந்த சம்பவம் கொங்கராம்பூண்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us