sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண் கொலை பற்றி அவதூறு: அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

/

பெண் கொலை பற்றி அவதூறு: அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

பெண் கொலை பற்றி அவதூறு: அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

பெண் கொலை பற்றி அவதூறு: அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

19


ADDED : ஏப் 22, 2024 05:42 PM

Google News

ADDED : ஏப் 22, 2024 05:42 PM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின்போது கடலூரில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, திமுக கூட்டணிக்கு ஓட்டளிக்காததால் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். தவறான தகவல் தெரிவித்ததாக அண்ணாமலை மீது கடலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பக்கிரிமானியம் கிராமத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின்போது, அதே கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி கோமதி (45) என்பவர்களுக்கும், திமுக பிரமுகர்களான சேதுராமன் மகன் ரவி, அவரது ஆதரவாளர் கலைமணி ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கோமதி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

வழக்குப்பதிவு


இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு ஓட்டளிக்கவில்லை என்பதற்காக திமுக.,வினர் இந்த பாதக செயலை செய்திருப்பதாக' செய்தி வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் பெண் இறப்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்து தெரிவித்ததாக அண்ணாமலைக்கு எதிராக புகாரளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தவறான தகவல் தெரிவித்ததாக அண்ணாமலை மீது கடலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

கஞ்சா தலைநகர்

அண்ணாமலை 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டதாவது: தமிழகத்தில், கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. சென்னையில் கஞ்சா வியாபாரிகள், காவல் துறையினரைத் தாக்கியது, கும்பகோணம் அருகே இளைஞர்கள், கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியது, இன்று, தேனியில் கஞ்சா போதையில் மனைவி, மாமனாரைத் தாக்கிய நபர் என கடந்த மூன்று நாட்களில், வெளிவந்த செய்திகள், பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது. ஆனால், குற்றம் நடந்து செய்தியான பிறகே குற்றவாளிகளைக் கைது செய்ய முன்வரும் போலீசாருக்கு, கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? ஏன் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை? திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாகச் செயல்பட்டதைக் கண்டுகொள்ளாமல், 3 ஆண்டுகளாகக் கோட்டைவிட்டது போல, கஞ்சா புழக்கத்தைத் தடுக்க இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது, மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us