ADDED : ஜன 13, 2026 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுக்கு பரிசுத்தொகை கொடுப்பதால், விவசாயத்திற்கு புதிதாக கடன் வழங்க முடியாது என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கவலைப்பட வேண்டியதில்லை. தி.மு.க., அரசில் நிதி நிர்வாகம் மிக சிறப்பாக இருக்கிறது.
அ.தி.மு.க.,விடம், 50 தொகுதிகளுக்கும் மேல் பா.ஜ., கேட்பதாக சொல்லப்படுவது குறித்து எங்களுக்கு கவலையில்லை. அது, தே.ஜ., கூட்டணி விவகாரம்.
கரூர் சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜயிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்துவது குறித்து நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. விஜய் முதலில் தேர்தல் களத்துக்கு வரட்டும். தேர்தலை சந்தித்த பின்தான் அவருடைய பலம் குறித்து தெரியும்.
விடுபட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்டோரும் பாராட்டி உள்ளனர்.
- பெரியசாமி, தமிழக அமைச்சர், தி.மு.க.,

