sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு: மீனவர்கள் குற்றச்சாட்டு

/

வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு: மீனவர்கள் குற்றச்சாட்டு

வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு: மீனவர்கள் குற்றச்சாட்டு

வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு: மீனவர்கள் குற்றச்சாட்டு


ADDED : ஜூலை 15, 2025 09:33 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் ஆகியவற்றின்போது, 'மீனவர் சமுதாயத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நான்கு ஆண்டுகளாகியும், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து, தென்னிந்திய மீனவர்கள் சங்கத் தலைவர் கு.பாரதி கூறியதாவது:

கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., 505 வாக்குறுதிகளை அளித்தது. அதில், 114வது வாக்குறுதியாக, 'மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து, பழங்குடியினருக்கான சலுகைகளை அவர்கள் பெற, தி.மு.க., முயற்சி செய்யும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், லோக்சபா தேர்தலிலும் வாக்குறுதி அளித்தது.

ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, சட்டசபையில், ஒரு தீர்மானம் கூட போடவில்லை. விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. எனவே, இந்த ஆண்டிலேயே வாக்குறுதியை நிறைவேற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us