sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மத்திய அரசு மானியத்தில் விசைப்படகுகள் வழங்கும் திட்டம்; விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை

/

மத்திய அரசு மானியத்தில் விசைப்படகுகள் வழங்கும் திட்டம்; விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை

மத்திய அரசு மானியத்தில் விசைப்படகுகள் வழங்கும் திட்டம்; விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை

மத்திய அரசு மானியத்தில் விசைப்படகுகள் வழங்கும் திட்டம்; விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை

4


UPDATED : ஜூன் 09, 2025 05:53 AM

ADDED : ஜூன் 09, 2025 01:58 AM

Google News

UPDATED : ஜூன் 09, 2025 05:53 AM ADDED : ஜூன் 09, 2025 01:58 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'மத்திய அரசின் மீன்வள திட்டத்தின் கீழ், மானிய விலையில் 50 விசைப்படகுகள் வழங்கும் திட்டத்தை, மீன்வளத் துறை அதிகாரிகள் செயல்படுத்த மறுக்கின்றனர்' என, மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

'பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா' எனப்படும் பிரதம மந்திரி மீன்வள திட்டத்தின் கீழ், தமிழக மீனவர்களுக்கு மானிய விலையில் 50 விசைப்படகுகள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஒரு விசைப்படகிற்கு, 1.20 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு, அரசு சார்பில், 60 சதவீத மானியம் வழங்கப்படும். பயனாளிகள், 40 சதவீதம் செலுத்த வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை முறையாக பெற்று சமர்ப்பிக்கும்படி, தமிழக அரசிடம் மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, பல புதிய விதிமுறைகளை அறிவித்து, தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் விண்ணப்பங்களை நிராகரிக்கின்றனர்.

அதனால், திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க பொதுச்செயலர் சகாயபாபு கூறியதாவது:

மானிய விலையில் விசைப்படகுகள் வழங்கும் திட்டம், 2022ல் அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமரியில், 20 மீனவர்கள் விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பங்கள் விதிகளின்படி இல்லை எனக்கூறி, மீன்வளத் துறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.

ஆனால், மீனவர்கள் ஆர்வம் காட்டவில்லை என பொய் கூறி திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. மீனவர்களின் நலனுக்காக அதிகாரிகள் செயல்பட வேண்டும். அரசு வழங்கக்கூடிய சலுகைகளை மீனவர்கள் பெற உதவ வேண்டும். அதற்கு மாறாக செயல்படுவது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க மாவட்ட செயலர் கிறிஸ்டோபர் கூறியதாவது:

'ஐ.ஆர்.எஸ்., சான்றிதழ் இருந்தால் தான், மானிய விலையில் விசைப்படகு வழங்கும் திட்டத்தில் பயன் பெற முடியும்' என்று மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த சான்றிதழ் பெற, 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும்.

ஆனால், ஐ.ஆர்.எஸ்., சான்றிதழ் வாங்க வேண்டியது கட்டாயம் இல்லை. அதை காரணமாக வைத்து, விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரிக்கின்றனர். இதற்கு அரசு முறையான தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'முறையாக விண்ணப்பிக்கவில்லை'

மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:


விதிகளின்படி, மீனவர்கள் முறையாக விண்ணப்பிக்கவில்லை. படகின் உறுதித்தன்மை மற்றும் கட்டுமான அமைப்புக்கு, ஐ.ஆர்.எஸ்., என்ற இந்திய கப்பல் பதிவு சான்றிதழ் முக்கியமானது. அதையும் தர மறுக்கின்றனர். அவர்களின் விருப்பப்படி படகு கட்டுமானத்தை அமைக்க விரும்புகின்றனர். அதனால், திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம். முறையாக விண்ணப்பித்தால் இத்திட்டத்தில் பயன் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்..






      Dinamalar
      Follow us