sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முன்னாள் அமைச்சர் மீதான ஐந்து வழக்குகள் ரத்து

/

முன்னாள் அமைச்சர் மீதான ஐந்து வழக்குகள் ரத்து

முன்னாள் அமைச்சர் மீதான ஐந்து வழக்குகள் ரத்து

முன்னாள் அமைச்சர் மீதான ஐந்து வழக்குகள் ரத்து


ADDED : நவ 06, 2025 10:37 PM

Google News

ADDED : நவ 06, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீதான ஐந்து வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக இருப்பவர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். இவர் மீது, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி, அனுமதியின்றி கடந்த 2023ல் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியது; மதுரை தனியார் மண்டபத்தில் அரசியல் கூட்டம் நடத்தியது உட்பட ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், உதயகுமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர்கள் முகமது ரியாஸ், அய்யப்பராஜ் ஆகியோர் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் உதயகுமார் மீதான ஐந்து வழக்குகளையும் ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us