sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உயர் நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் ஓய்வு

/

உயர் நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் ஓய்வு

உயர் நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் ஓய்வு

உயர் நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் ஓய்வு


ADDED : ஏப் 30, 2025 07:30 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளில், இன்று ஒருவரும், மே மாதம் ஐந்து பேரும் ஓய்வு பெறுவதால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை, 60 ஆக குறைகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை, 75. தற்போது உள்ள, 65 நீதிபதிகளில், ஒருவர் இன்றும், நான்கு பேர் மே மாதமும் ஓய்வு பெறுகின்றனர். இன்று நீதிபதி ஆர்.ஹேமலதா; மே, 2ம் தேதி நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர்; 9ல், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன்; 16ல், நீதிபதி வி.பவானிசுப்பராயன்; 31ல், நீதிபதி வி.சிவஞானமும் பணி ஓய்வு பெறுகின்றனர்.

இவர்கள் ஐந்து பேருக்கும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், இன்று மாலை பிரிவு உபசார விழா நடக்கிறது. உயர் நீதிமன்றத்துக்கு, மே 1 முதல் ஜூன் வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், விடுமுறைக் காலத்தில் ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு, கடைசி பணி நாளான. இன்று பிரிவு உபசார விழா நடக்கிறது.

ஐந்து நீதிபதிகள் ஓய்வை அடுத்து நீதிபதிகள் காலியிடம், 15 ஆக உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us