ADDED : ஜன 01, 2024 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : மலை நகரான கொடைக்கானலில் சில தினங்களாக தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆங்கில புத்தாண்டான நேற்று பயணிகள் வருகை இருந்த நிலையில் பனிமூட்டம் நிலவிய ரம்யமான சூழலை ரசித்தனர்.
காற்றில் ஈரப்பதம் அதிகரித்து பனியுடன் குளிர் நிலவியது. இதையடுத்து எதிரே வந்த வாகனங்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. தொடர்ந்து நகரை சூழ்ந்த பனிமூட்டத்தை சுற்றுலா பயணிகள் ரசித்தவாறு ஏரி சாலையில் சைக்கிள், குதிரைச்சவாரி மற்றும் ஏரியில் படகு சவாரியும் செய்தனர்.

