sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கால்பந்து மைதான அரசியலில் உதை வாங்கியது சென்னை மாநகராட்சி; நேற்று பாஸ் பாஸ்... இன்று வாபஸ்!

/

கால்பந்து மைதான அரசியலில் உதை வாங்கியது சென்னை மாநகராட்சி; நேற்று பாஸ் பாஸ்... இன்று வாபஸ்!

கால்பந்து மைதான அரசியலில் உதை வாங்கியது சென்னை மாநகராட்சி; நேற்று பாஸ் பாஸ்... இன்று வாபஸ்!

கால்பந்து மைதான அரசியலில் உதை வாங்கியது சென்னை மாநகராட்சி; நேற்று பாஸ் பாஸ்... இன்று வாபஸ்!

10


ADDED : அக் 30, 2024 12:55 PM

Google News

ADDED : அக் 30, 2024 12:55 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் கால்பந்து மைதானங்களை தனியாருக்கு கொடுக்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நேற்று (அக்.29) நடைபெற்றது. கூட்டத்தில் மொத்தம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மாநகராட்சிக்கு சொந்தமான 9 கால்பந்து மைதானங்களை செயற்கை புல் விளையாட்டு திடலாக மாற்றி, ஒப்பந்த முறையில் பராமரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த மைதானங்களில் விளையாட ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.120 என்று கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.2.33 கோடி வருவாய் ஈட்டப்படும் என்று கணக்கிடப்பட்டது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாது எதிர்க்கட்சிகளும் ஒரே புள்ளியில் இணைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந் நிலையில் ஒட்டுமொத்த கட்சிகளும் ஒன்றாக நின்று எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது அந்த முடிவை சென்னை மாநகராட்சி நிர்வாகம் கைவிட முடிவு செய்தது. இதையடுத்து, நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறுவதாக சென்னை மாநகராட்சி இன்று(அக்.30)அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி உள்ளதாவது;

மாணவ - மாணவியர்களின் கோரிக்கையினையேற்று, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தும் வகையிலும், 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களை கட்டணம் ஏதுமின்றி தொடர்ந்து பயன்பாட்டிற்கு அனுமதிக்க பெருநகர சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. இவ்விளையாட்டுத் திடல்களின் பராமரிப்பு செலவினங்களை மாநகராட்சியே ஏற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த பதிவில் மேயர் பிரியா கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us