ADDED : ஜன 20, 2026 09:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் காட்டுத்தீயால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம், தமிழக வனத்துறைக்கு காட்டுத்தீ குறித்த தகவலை நேற்று அனுப்பியது.
அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை சரகம், திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட நாமக்கல் சரகம், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி சரகம் ஆகிய இடங்களில், நேற்று காட்டுத்தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு கள பணியாளர்கள் அனுப்பப்பட்டு, காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டது என வனத்துறை அதிகா ரிகள் தெரிவித்தனர்.

