ADDED : பிப் 26, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஏழு மாவட்டங்களில், 17 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியில் நான்கு; விழுப்புரம், வேலுாரில் தலா மூன்று இடங்கள்; திருவள்ளூர், தேனி, சேலம் மாவட்டங்களில் தலா இரண்டு; திருச்சியில் ஒரு இடம், என, 17 இடங்களில் நேற்று காட்டுத் தீ ஏற்பட்டது.
வன ஆராய்ச்சி நிறுவனம் அளித்த தகவல் அடிப்படையில், தீ அணைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

