sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 4 இடங்களில் காட்டுத்தீ; வனத்துறை தகவல்

/

 4 இடங்களில் காட்டுத்தீ; வனத்துறை தகவல்

 4 இடங்களில் காட்டுத்தீ; வனத்துறை தகவல்

 4 இடங்களில் காட்டுத்தீ; வனத்துறை தகவல்


ADDED : டிச 15, 2025 03:00 AM

Google News

ADDED : டிச 15, 2025 03:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், நேற்று நான்கு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகரிக்கும் போது, ஜனவரி முதல் மார்ச் வரை, வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். இதைக் கட்டுப்படுத்த, வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், செயற்கைக்கோள் உதவியுடன், காட்டுத்தீ ஏற்படும் இடங்களை, இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் கண்காணித்து வருகிறது.

அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், டி.என். பாளையம் சரகத்தில், நான்கு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது.

இது குறித்த தகவலை, இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம், தமிழக வனத்துறைக்கு அனுப்பியது. அதன் அடிப்படையில், களப்பணியாளர்களை உஷார்படுத்தி, காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us