sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போதையாலேயே தன்னிலை மறந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர் *முனுசாமி எம்.எல்.ஏ., ஆவேசம்

/

போதையாலேயே தன்னிலை மறந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர் *முனுசாமி எம்.எல்.ஏ., ஆவேசம்

போதையாலேயே தன்னிலை மறந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர் *முனுசாமி எம்.எல்.ஏ., ஆவேசம்

போதையாலேயே தன்னிலை மறந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர் *முனுசாமி எம்.எல்.ஏ., ஆவேசம்


ADDED : பிப் 08, 2025 07:09 PM

Google News

ADDED : பிப் 08, 2025 07:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:''பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு, 50 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் வைப்புத்தொகையாக அரசு செலுத்த வேண்டும்,'' என, அ.தி.மு.க., துணை பொது செயலர் முனுசாமி எம்.எல்.ஏ., கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று ஆசிரியர்களால், பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டத்தை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட முனுசாமி அளித்த பேட்டி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாணவியருக்கு தொடந்து பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. தற்போது பள்ளி வளாகத்தில், மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதை பொருட்கள் தடையின்றி கிடைப்பதால், அதை உட்கொள்பவர்கள், தன்னிலை மறந்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அரசு பள்ளிகளில், தற்போது சி.இ.ஓ., உட்பட எந்த கல்வி அலுவலர்களும் ஆய்வுகள் மேற்கொள்வதில்லை.

பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர், சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நியமிக்க வேண்டும். அவர்களுடன் கல்வித்துறை அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

தற்போது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 50 லட்சம் ரூபாயை வங்கி கணக்கில் வைப்புத்தொகையாக அரசு செலுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள், பொருத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us