sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முன்னாள் ராணுவ வீரர் கரடி தாக்கியதில் சாவு

/

முன்னாள் ராணுவ வீரர் கரடி தாக்கியதில் சாவு

முன்னாள் ராணுவ வீரர் கரடி தாக்கியதில் சாவு

முன்னாள் ராணுவ வீரர் கரடி தாக்கியதில் சாவு


ADDED : ஜன 06, 2025 03:32 AM

Google News

ADDED : ஜன 06, 2025 03:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சென்றாயப்பெருமாள், 65. இவருக்கு சொந்தமான தோட்டம் குமணந்தொழு சிதம்பரம் விலக்கு அருகே மலையடிவாரத்தில் உள்ளது. இவர், தன் மனைவி சரஸ்வதியிடம், தோட்டத்திற்கு செல்வதாக கூறி, டூ - வீலரில் நேற்று முன்தினம் இரவு சென்றார்; நேற்று காலை வரை வீடு திரும்பவில்லை. மொபைல் போன் அழைப்பையும் ஏற்கவில்லை.

மனைவி, தோட்டத்தின் மேற்கு பக்கம் உள்ள 'கேட்' வழியாக சென்று பார்த்தார். அங்கு, கரடியால் தாக்கப்பட்டு சென்றாயப்பெருமாள் தலை, முகத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். முன்னதாக, அவர் உயிர் தப்ப கரடியுடன் போராடிய தடயங்கள் இருந்தன. கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் கண்மணி, மயிலாடும்பாறை எஸ்.ஐ., ராமசாமி விசாரித்தனர். கரடிகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us