ADDED : பிப் 26, 2026 02:28 AM
சென்னை: 'அரசு வழங்கிய இலவச மொபைல் போன் வாங்கி, ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தால், பார்வை குறைபாடு மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், புது போன் பெற விண்ணப்பிக்கலாம்' என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பார்வை குறைபாடுடைய மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவசமாக மொபைல் போன் வழங்கப்படுகிறது.
கல்லுாரி மாணவர்கள், வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் சுய தொழில் புரிவோர், அரசு வழங்கும் இலவச மொபைல் போன் பெற தகுதியானவர்கள்.
அரசிடம் இலவச மொபைல் போன் வாங்கி, ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தால், புது போன் பெற, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்கலாம். 'இ - சேவை' மையம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

