ADDED : மார் 03, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் எட்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.
ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ளார். அவரது வீட்டை உடைத்து, போலீசார் சோதனை செய்தனர். அதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, அவரது வீட்டிற்கு 'சீல்' வைக்கப்பட்டது.
சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், அவர் தொடர்புடைய எட்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜாபர் சாதிக்கை தேடும் பணியில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

