sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இனி எப்போதும் நம்ம ஆட்சி தான்! கடிதத்தில் ஸ்டாலின் உற்சாகம்

/

இனி எப்போதும் நம்ம ஆட்சி தான்! கடிதத்தில் ஸ்டாலின் உற்சாகம்

இனி எப்போதும் நம்ம ஆட்சி தான்! கடிதத்தில் ஸ்டாலின் உற்சாகம்

இனி எப்போதும் நம்ம ஆட்சி தான்! கடிதத்தில் ஸ்டாலின் உற்சாகம்


ADDED : நவ 18, 2024 01:10 AM

Google News

ADDED : நவ 18, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'வழிநெடுக மக்கள் நின்று வரவேற்பு அளிப்பதை 'ரோடு ஷோ' என்கின்றனர். அது, தி.மு.க., அரசின் திட்டங்களால் பயன்பெற்று வரும் மக்களின் திருவிழா கொண்டாட்டம்' என, கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது கடிதம்:

மாவட்டந்தோறும் கலந்தாய்வு என நாமக்கல்லில் அறிவித்தேன். கோவை, விருதுநகர் மாவட்டங்களில், நேரடி ஆய்வு நடத்தினேன். கடந்த 14, 15ம் தேதிகளில், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில், நேரடி கள ஆய்வை மேற்கொண்டேன்.

இரண்டு மாவட்ட மக்களுக்கு, திட்டங்களை வழங்கி, கட்சி தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தியது, மனதுக்கு பெரும் நிறைவை தந்தது.

சிறிய ஊரான ஜெயங்கொண்டத்தில், மிகச்சிறிய பயணியர் விடுதி உண்டு. அங்கு பலமுறை தங்கிய நினைவுகள் வந்து சென்றன.

சிறிய விடுதியாக இருந்தாலும், மனதுக்கு இனிய விடுதியாக இருந்தது. ஜெயங்கொண்டத்தில் மழை துாறலுக்கு இடையில், மக்கள் திரண்டு நின்று மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர்.

காரில் இருந்தபடி கையைசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டேன். கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டேன்.

இன்றைய அரசியல் களத்தில் வழிநெடுக மக்கள் நின்று வரவேற்பளிப்பதை, 'ரோடு ஷோ'என்கின்றனர்.

'ஷோ' என்றால் காட்சிப் பொருளாகும். என்னை பொறுத்தவரை, இது வெறும் காட்சியும் அல்ல; மக்கள் நமக்கு காட்சி பொருளுமல்ல. தி.மு.க., அரசின் நல்லாட்சிக்கு கிடைக்கின்ற மகத்தான வரவேற்பு. தி.மு.க., அரசின் திட்டங்களால் பயன்பெற்று வரும், மக்களின் திருவிழா கொண்டாட்டம்.

ஜெயங்கொண்டத்தில் இருந்து, அரியலுாருக்கு செல்லும் வழியெங்கும், மக்கள் திரண்டு நின்றனர். இனி எப்போதும் நம்ம ஆட்சிதான். தி.மு.க., ஆட்சி சூப்பர் என்றனர்.

நான், 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை வலியுறுத்தி வருவதை மனதில் வைத்து, 'நிச்சயம் 200 ஜெயிப்போம்' என, உற்சாக குரலுடன் உத்தரவாதம் அளித்தனர்.

மக்கள் அளித்த உறுதியையும், அவர்கள் காட்டுகின்ற பாசத்தையும் பார்த்து பரவசம் அடைந்தேன். மக்களுக்கான திட்டங்கள் சரியாக போய் சேர வேண்டியதை, கள ஆய்வுகள் வழியே உறுதி செய்வதன் அவசியத்தை உணர்ந்தேன்.

வரும் 28, 29ம் தேதிகளில், விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்ல உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமாவுக்கு வைத்த 'ஐஸ்'

கட்சியினருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:வி.சி.க., தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான திருமாவளவன், ஜெயங்கொண்டம் அரசு விடுதியில், நவ., 15ம்தேதி காலை என்னை சந்தித்தார். கடந்த ஆண்டு பெரம்பலுாரில், 'சிப்காட்' தொழிற்பூங்கா திறப்பு விழாவில், திருமாவளவன் பேசும் போது, 'அரியலுார் மாவட்டத்திற்கும், ஒரு சிப்காட் தொழிற்பூங்கா வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.அவரது உள்ளத்தை நான் அறிவேன். மூத்த சகோதரராக என்னிடம் உண்மையான பாசம் காட்டும் திருமாவளவன், என் உறுதியான செயல்பாடுகளை அறிவார். அதன்படி, தி.மு.க., அரசிடம் அவர் வைத்த கோரிக்கை ஓராண்டுக்குள் நிறைவேறி, அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் என்னிடம் நன்றி தெரிவித்தார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us