sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கால்நடை பண்ணைகளை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு

/

கால்நடை பண்ணைகளை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு

கால்நடை பண்ணைகளை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு

கால்நடை பண்ணைகளை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு


ADDED : ஜூலை 03, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கால்நடை பண்ணைகளில், சேதமடைந்த கொட்டகைகளை சீரமைத்து, தரம் உயர்த்தவும், புதிய கால்நடைகளை கொள்முதல் செய்யவும், 7.87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கால்நடைத் துறையின் கீழ், 13 பண்ணைகள் செயல்படுகின்றன. இப்பண்ணைகளில், பல கால்நடை கொட்டகைகள், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. அவற்றில் பெரும்பாலானவை சேதமடைந்துள்ளன. அவற்றை கால்நடைகள் தங்கும் வகையில் மேம்படுத்த 2.96 கோடி ரூபாய்; கால்நடை இருப்பை அதிகரிக்க, புதிய கால்நடைகளை கொள்முதல் செய்ய, 4.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிதியில், திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டி கால்நடை பண்ணைக்கு, 59 லட்சம்; சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு, 57 லட்சம்; தஞ்சாவூர் மாவட்டம் நடுவூர் 46.5 லட்சம்; திருவாரூர் மாவட்டம், கொருக்கை பண்ணைக்கு 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்துார் ஆட்டுப் பண்ணைக்கு, 33 லட்சம்; வேலுார் மாவட்டம், முகுந்தராயபுரம் ஆட்டுப்பண்ணைக்கு, 46 லட்சம்; செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் கோழிப்பண்ணைக்கு, 23 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us