கட்சி அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்: கைத்தாங்கலாக அழைத்துச் சென்ற நிர்வாகிகள்
கட்சி அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்: கைத்தாங்கலாக அழைத்துச் சென்ற நிர்வாகிகள்
ADDED : மார் 08, 2026 05:39 PM

சென்னை: சென்னையில் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் நிர்வாகிகள் மத்தியில் திடீர் பதற்றம் உருவானது.
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பங்கேற்று இருந்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர், அவர் படியில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். மயக்கம் அடைந்து தடுமாறியபடி கீழே விழுந்த அவரை உடன் இருந்த கட்சி நிர்வாகிகள் தூக்கி பிடித்தனர்.
பின்னர் கைத்தாங்கலாக அவரை கீழே அழைத்துச் சென்றனர். பிறகு கிரிஷ் சோடங்கருக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர், விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார்.

