sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்குங்க: தமிழக அரசுக்கு இ.பி.,எஸ் வலியுறுத்தல்

/

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்குங்க: தமிழக அரசுக்கு இ.பி.,எஸ் வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்குங்க: தமிழக அரசுக்கு இ.பி.,எஸ் வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்குங்க: தமிழக அரசுக்கு இ.பி.,எஸ் வலியுறுத்தல்

6


ADDED : ஜன 04, 2024 02:05 PM

Google News

ADDED : ஜன 04, 2024 02:05 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. ஆயிரம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.,எஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இ.பி.,எஸ். வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பை மட்டும் திமுக அரசு அறிவித்துள்ளது.

எனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. ஆயிரம் வழங்க வேண்டும். எண்ணூர் முகத்துவாரத்தில் பரவிய கச்சா எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5ஆயிரம் வழங்க வேண்டும்.

கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு கொள்முதலில் முறைகேட்டுக்கு இடம்தராமல் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.,எஸ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us