தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.68,480!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.68,480!
ADDED : ஏப் 03, 2025 10:17 AM

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால் பாதுகாப்பு கருதி, பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளதால், நம் நாட்டிலும் அதன் விலை எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த திங்கள் கிழமை (மார்ச் 31) காலை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,425 ரூபாய்க்கும், சவரன், 67,400 ரூபாய்க்கும் விற்பனையானது. மாலையில் கிராம், 8,450 ரூபாய்க்கும், சவரன், 67,600 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 01) தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் உயர்ந்து, 8,510 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 480 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 68,080 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று (ஏப்ரல் 02) தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை தாண்டியது.