ADDED : ஆக 23, 2025 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 800 ரூபாய் அதிகரித்தது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் சில தினங்களாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,215 ரூபாய்க்கும், சவரன், 73,720 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 9,315 ரூபாய்க்கு விற்கப் பட்டது.
சவரனுக்கு, 800 ரூபாய் அதிகரித்து, 74,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது.