தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது!
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது!
ADDED : பிப் 19, 2025 10:12 AM

சென்னை: சென்னையில் இன்று (பிப்.,19) 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.64,280க்கும், ஒரு கிராம் ரூ.8,035க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,890 ரூபாய்க்கும்; சவரன், 63,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 108 ரூபாய்க்கு விற்பனையானது.
ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. பிப்.,17ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 7,940 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 63,520 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று (பிப்.,18) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760க்கும், ஒரு கிராம் ரூ.7,970க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.64,280க்கும், ஒரு கிராம் ரூ.8,035க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று தினங்களில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.