sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தங்கம் தென்னரசு பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை

/

தங்கம் தென்னரசு பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை

தங்கம் தென்னரசு பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை

தங்கம் தென்னரசு பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை


ADDED : மார் 27, 2025 12:52 AM

Google News

ADDED : மார் 27, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சட்டசபையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை எழுந்தது.

திருப்போரூர் தொகுதி வி.சி., எம்.எல்.ஏ., பாலாஜி பேசும்போது, ''அம்பேத்கர் உள்ளிட்டோரின் சிந்தனைகளை, என் சிந்தையில் ஏற்றி, என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கும், என் தந்தைக்கு துணையாக இருக்கக்கூடிய என் அன்னை, என் மனைவி ஷர்மிளா ஆகியோர், மாடத்தில் இருந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நன்றி,'' என்றார்.

அப்போது அமைச்சர் துரைமுருகன், ''எம்.எல்.ஏ., பாலாஜி, தன் துணைவியார் மாடத்தில் இருந்து பார்ப்பதாகக் கூறினார். அதை கேட்கும்போது, கம்பராமாயணத்தில் வரும், 'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்' என்ற வரி நினைவுக்கு வருகிறது,'' என்றார்.

அதைத் தொடர்ந்து, அமைச்சர் தங்கம் தென்னரசு, ''இங்கு அவரும் நோக்கினார், அவர்களும் நோக்கினர், அவை முன்னவரும் நோக்கினார்,'' எனக் கூற, சபையில் சிரிப்பலை எழுந்தது.






      Dinamalar
      Follow us