sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்திற்கு எதிர்ப்பு: தோட்டக்கலை துறை சங்கங்களை உடைக்க அரசு முயற்சி

/

 உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்திற்கு எதிர்ப்பு: தோட்டக்கலை துறை சங்கங்களை உடைக்க அரசு முயற்சி

 உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்திற்கு எதிர்ப்பு: தோட்டக்கலை துறை சங்கங்களை உடைக்க அரசு முயற்சி

 உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்திற்கு எதிர்ப்பு: தோட்டக்கலை துறை சங்கங்களை உடைக்க அரசு முயற்சி


ADDED : டிச 22, 2025 12:42 AM

Google News

ADDED : டிச 22, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் - 2.0'ஐ செயல்படுத்துவதற்கு, தோட்டக்கலை துறையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், துறையின் அலுவலர்கள் சங்கங்களை உடைப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

வேளாண் துறையின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன.

வேளாண் துறை வாயிலாக உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட சாகுபடிக்கு தேவையான உதவிகளும், தோட்டக்கலை துறை வாயிலாக காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், மலைப்பயிர்கள் உள்ளிட்ட சாகுபடிக்கு தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன.

அரசாணை வேளாண் இயந்திரங்களை மானிய விலையிலும், வாடகைக்கும், வேளாண் பொறியியல் துறை வழங்கி வருகிறது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்புகூட்டி விற்பனை செய்வதற்கான உதவிகளை, வேளாண் வணிகப்பிரிவு செய்து வருகிறது.

இதற்கென தனித்தனியாக கிராம அளவில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் - 2.0' என்ற திட்டத்தை செயல்படுத்த வேளாண் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, நான்கு கிராமங்களுக்கு ஒரு அலுவலரை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

அனைத்து துறை தொடர்பான உதவிகள், தொழில்நுட்ப ஆலோசனைகளை இவர்கள் வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வேளாண் படிப்பு படித்த அலுவலர்கள், தோட்டக்கலை தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு உதவுவதில் நடைமுறை சிக்கல் உள்ளது.

முற்றுகை போராட்டம் தோட்டக்கலை அலுவலர்களின் பதவி உயர்வு, ஊதிய பலன்கள், அடிப்படை பணி உரிமைகள் பாதிக்கப்படும் என்ற புகாரும் எழுந்துள்ளது.

அதனால், இத்திட்டத்திற்கு தோட்டக்கலை துறையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்த உள்ளதாகவும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், உச்சகட்ட பரபரப்பு எழுந்துள்ளது.

இதையடுத்து, தோட்டக்கலை துறை சங்கங்களை உடைப்பதற்கான பணிகளை தமிழக அரசு மறைமுகமாக துவக்கிஉள்ளது.

இந்தப் பிரச்னையால், வேளாண் துறையில் உச்சகட்ட பரபரப்பு எழுந்துள்ளது.

'அலுவலர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி'

வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண் விரிவாக்கம் என்பது, ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்படும் புதிய ரகங்கள், உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை உயர்த்தும் தொழில்நுட்பங்கள், பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான வழிமுறைகள், நவீன வேளாண் கருவிகள், உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைபொருட்களை சந்தைப் படுத்துதல் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. விவசாயிகள் தங்கள் வருமானத்தை உயர்த்த, தற்போது வேளாண் பயிர்களுடன் தோட்டக்கலை பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். அவர்களுக்கு வேளாண் விரிவாக்கத் திட்டத்தின் பலன்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. இதுபோன்ற இடர்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு, 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, இதுநாள் வரை ஆறு முதல் எட்டு கிராமங்களுக்கு சென்று வந்த வேளாண் துறை களப்பணி அலுவலர்கள் தற்போது நான்கு கிராமங்களுக்கு மட்டும் சென்றால் போதும். களப்பணி அலுவலர் அதிகபட்சமாக 2,922 ஏக்கர் சாகுபடி பரப்பை பார்வையிட்டு, களப்பணி ஆற்றினால் போதும். ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் கிராமங் களுக்கு சென்று, விவசாயிகளை சந்திக்க வேண்டும். ஐந்தாவது நாள் தலைமையிடத்தில் வட்டார அலுவலரை சந்தித்து, திட்ட முன்னேற்றம், களப் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். களப்பணி அலுவலர்களுக்கு வேளாண்மை, தோட்டக்கலை பயிர்கள் குறித்து அனைத்து விதமான பயிற்சிகள் அளித்து, தொழில்நுட்ப திறன் விரிவாக மேம்படுத்தப்பட உள்ளது. இதனால், தோட்டக்கலை பயிர்களுக்கு பின்னடைவு ஏற்படும் என்ற கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தோட்டக்கலை மாணவர்களின் வாய்ப்புகள் பறிபோகும்; தோட்டக்கலை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பது தவறு. இதை உணராமல், தோட்டக்கலை களப்பணி அலுவலர்களில் ஒரு சிலர், தங்களது சுய லாபத்திற்காக அனைவரையும் போராட துாண்டி விடுகின்றனர். விவசாயிகளிடம் நேரடியாக சென்று பழகி, வேளாண்மை சார்ந்த அனைத்து திட்டங்களையும் கொண்டு சேர்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விருப்பமில்லை. இது முறையற்ற செயலாக தெரிகிறது. இவ்வாறு தட்சிணாமூர்த்தி கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us