ADDED : ஆக 08, 2025 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் டிரைவர் மாரடைப்பால், இறந்தார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் ராமு, 48; அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு விருத்தாசலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கழுதுார் நோக்கி புறப்பட தயாரானார்.
அப்போது, அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, ஸ்டீயரிங்கில் சரிந்து விழுந்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது, அவரை பரிசோதித்த டாக்டர், ராமு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

