sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கையேடு தயாரிக்க 4 மாதமாக ஆள் தேடுகிறது அரசு துறை; ரூ.3,838 கோடி திட்டம் தாமதம்

/

 கையேடு தயாரிக்க 4 மாதமாக ஆள் தேடுகிறது அரசு துறை; ரூ.3,838 கோடி திட்டம் தாமதம்

 கையேடு தயாரிக்க 4 மாதமாக ஆள் தேடுகிறது அரசு துறை; ரூ.3,838 கோடி திட்டம் தாமதம்

 கையேடு தயாரிக்க 4 மாதமாக ஆள் தேடுகிறது அரசு துறை; ரூ.3,838 கோடி திட்டம் தாமதம்


ADDED : நவ 20, 2025 11:53 PM

Google News

ADDED : நவ 20, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: உலக வங்கி நிதியில், 3,838 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட, நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டு திட்டங்களுக்கான கையேடு தயாரிக்க, கலந்தாலோசகர் தேடல் நான்கு மாதமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு திட்டம், நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டு திட்டங்களுக்கு, உ லக வங்கியிடம் நிதி பெற முடிவு செய்யப்பட்டது. இதில், நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டு திட்டத்தை, 3,838 கோடி ரூபாயில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில், 2,490 கோடி ரூபாய் உலக வங்கியிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், அடிப்படை சேவைகளை மேம்படுத்த தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இதில் உருவாக்கப்படும்.

முதல் கட்டமாக, மாநகராட்சிகள், நகராட்சிகள் என, 21 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப் பட்டன.

இத்திட்டத்தை செயல் படுத்தும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சிகளில் பொறியாளர்களுக்கான கையேடு தயாரிக்க திட்டமிடப்பட்டது.

பணிகளை மேற்கொள்வதில், ஒரே சீரான அணுகு முறையை ஏற்படுத்த, இந்த கையேடு அவசியமாகிறது.

இது குறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டு திட்டம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையால் உருவாக்கப்பட்டாலும், நகராட்சி நிர்வாகத்துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது.

இதில் பொறியாளர்கள் பணியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, கையேடு தயாரிக்க திட்டமிடப்பட்டது.

உலக வங்கி வழிகாட்டுதல் அடிப்படையில், இந்த கையேடு தயாரிக்க, கலந்தாலோசகர் தேர்வு செய்ய, சில மாதங்களுக்கு முன், 'டெண்டர்' வெளியிடப்பட்டது.

தகுதியான நிறுவனங்கள் எதுவும் இதில் பங்கேற்க முன்வரவில்லை. இதனால், மீண்டும் மீண்டும் கலந்தாலோசகர் தேடலுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறோம். விரைவில் இந்த தேடல் முடிவுக்கு வந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us