sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்

/

" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்

" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்

" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்

1


ADDED : ஏப் 28, 2025 12:26 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 12:26 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர், டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை,

வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒருபுறம் மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு விட்டு, அவர் பிறப்பித்த அரசாணைக்கு (GO.354) தடை போடுவது வரலாற்று பிழையாக அமையும் என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொண்டு, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

ஏற்கனவே 2019 ம் ஆண்டு அரசு மருத்துவர்கள் போராட்டத்தின் போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றுவதாக தெரிவித்த முதல்வர், இன்னமும் சொன்னதை செய்யவில்லை.

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா என்ற கேள்வி எழுகிறது. அரசாணை 354 ஐ அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமே அரசுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை மருத்துவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

அரசாணையை (GO.354) அமல்படுத்த கோரி ஜூன் 11 ம் தேதி மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரையை மருத்துவர்கள் மேற்கொள்ள உள்ளோம். அதற்கு முன்னதாகவே, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்கிட தமிழக முதல்வரை வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us