sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனுமதி பெறாத கட்டடங்களுக்கு அபராதத்தை உயர்த்தியது அரசு

/

அனுமதி பெறாத கட்டடங்களுக்கு அபராதத்தை உயர்த்தியது அரசு

அனுமதி பெறாத கட்டடங்களுக்கு அபராதத்தை உயர்த்தியது அரசு

அனுமதி பெறாத கட்டடங்களுக்கு அபராதத்தை உயர்த்தியது அரசு


ADDED : ஜூன் 28, 2025 10:36 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அனுமதி பெறாத கட்டடம் மற்றும் அனுமதி பெற்றதை விட கூடுதலாக கட்டப்பட்ட கட்டடம் போன்றவற்றுக்கு விதிக்கப்படும் அபராதத்தை, ஜூலை 1 முதல் அதிகரிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், கட்டடங்களுக்கு வரி விதிக்கும்போது, அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடம், அனுமதி பெற்று அதைவிட கூடுதலாக கட்டப்பட்ட கட்டடம் போன்றவற்றுக்கு, அனுமதிக்கான கட்டணத்துடன் அபராதமும் வசூலிக்கப்பட்டது.

இதுநாள் வரை அபராதமாக, சதுர அடிக்கு, 20 முதல் 25 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. இத்தொகை, கட்டட அனுமதி பெறும் கட்டடங்களுக்கான கட்டணம், சதுர அடிக்கு, 88 ரூபாய் என்பதை விட குறைவு என்பதால், அதை அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஜூலை 1 முதல், அனுமதி பெறாத, அனுமதிக்கு அதிகமாக கட்டப்பட்ட கட்டங்களுக்கு, கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும். அதாவது, குடியிருப்பு கட்டடங்களுக்கு, சதுர அடிக்கு 88 ரூபாய்; குடியிருப்பு இல்லாத கட்டடங்களுக்கு, சதுர அடிக்கு, 110 ரூபாய், அபராதத் தொகையாக வசூலிக்கப்படும். இதுதொடர்பாக, உள்ளாட்சி அமைப்புகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளன.






      Dinamalar
      Follow us