sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு ரூ.806 கோடி இழப்பீடு தர வேண்டியுள்ளது: ஐகோர்ட்டில் அரசு தகவல்

/

அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு ரூ.806 கோடி இழப்பீடு தர வேண்டியுள்ளது: ஐகோர்ட்டில் அரசு தகவல்

அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு ரூ.806 கோடி இழப்பீடு தர வேண்டியுள்ளது: ஐகோர்ட்டில் அரசு தகவல்

அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு ரூ.806 கோடி இழப்பீடு தர வேண்டியுள்ளது: ஐகோர்ட்டில் அரசு தகவல்


ADDED : ஏப் 13, 2025 02:04 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தமிழகத்தில் அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடாக, 806 கோடி ரூபாய் வழங்க வேண்டிஉள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டையில், 'பெல்' எனும் பாரத் மிகுமின் நிறுவன ஆலை அமைப்பதற்காக கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என கூறி, சந்திரசேகர், சேட்டு ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2017ல் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இழப்பீடு கோரும் நிலுவை வழக்குகளின் தற்போதைய விபரங்களை தாக்கல் செய்யுமாறு, உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, உயர் நீதிமன்ற பதிவுத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகம் முழுதும், 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்காக, 1,521.83 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படாமல் நிலுவை உள்ளது.

இழப்பீட்டுத் தொகையை வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி, 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதேபோல புதுச்சேரியில், 35.78 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி, 59 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கை தாக்கல்


இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வருவாய் துறை செயலர் தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், சிறப்பு பிளீடர் ஏ.செல்வேந்திரன் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதில், '2024 டிசம்பர் வரை, 806 கோடியே 22 லட்சத்து 21,109 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியதுள்ளது. இந்த இழப்பீடுகளை வழங்குமாறு பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த கோரிய 1,303 வழக்குகள் நிலுவையில் உள்ளன' என கூறப்பட்டுள்ளது.

அதையடுத்து, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''இந்த விஷயத்தின் முக்கியத்துவம், மிகப்பெரிய தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இழப்பீடு தொகைகளை விரைந்து வழங்க ஏதுவாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

''நிலுவை இழப்பீட்டு தொகையை வழங்குவது தொடர்பாக, அதிகாரிகள் இடையேயான கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதுதொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.

நீதிபதி வேதனை


இதைப் பதிவு செய்த நீதிபதி, நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதை உறுதி செய்ய, அட்வகேட் ஜெனரல் உதவுமாறு கூறினார். வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

கடந்த விசாரணையின்போது, 'நிலத்தை பொது தேவைகளுக்காக கையகப்படுத்திய பின், இழப்பீடு கோரும் நில உரிமையாளர்களை, மத்திய - மாநில அரசுகள் பிச்சை பாத்திரத்துடன் நிற்க செய்து விட்டன' என, நீதிபதி வேதனை தெரிவித்திருந்தார்.






      Dinamalar
      Follow us