sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் வாங்க அரசுக்கு பரிந்துரை

/

22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் வாங்க அரசுக்கு பரிந்துரை

22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் வாங்க அரசுக்கு பரிந்துரை

22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் வாங்க அரசுக்கு பரிந்துரை


ADDED : ஜன 31, 2025 12:36 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மத்திய அரசின் சார்பில், விவசாயிகளிடம் இருந்து, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம், நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.

நடப்பு சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்தது. அதற்கு ஏற்ப, 5.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, சமீபத்தில் திடீரென பல மாவட்டங்களில் பெய்த கன மழையால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.

எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்குமாறு தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இது தொடர்பாக ஆய்வு செய்ய, மத்திய அரசு, நான்கு அதிகாரிகள் அடங்கிய குழுவை, தமிழகத்திற்கு கடந்த வாரம் அனுப்பியது. இக்குழு, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில், நெல்லின் மாதிரியை எடுத்து, ஈரப்பதத்தை ஆய்வு செய்தது.

அதன் அடிப்படையில் அக்குழு, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யலாம் என, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, விரைவில் மத்திய அரசு அறிவிக்க உள்ளது.

அப்போது, 22 அல்லது 19 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் வாங்க அனுமதிக்குமா என்பது தெரிய வரும். இதற்கு முன், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, தமிழகம் கோரிக்கை விடுத்தபோது, 19 சதவீதம் வரை மட்டும் அனுமதி தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us