sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மெரினாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் கவர்னர் ரவி; பூங்கொத்து கொடுத்து முதல்வர் வரவேற்பு

/

மெரினாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் கவர்னர் ரவி; பூங்கொத்து கொடுத்து முதல்வர் வரவேற்பு

மெரினாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் கவர்னர் ரவி; பூங்கொத்து கொடுத்து முதல்வர் வரவேற்பு

மெரினாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் கவர்னர் ரவி; பூங்கொத்து கொடுத்து முதல்வர் வரவேற்பு

8


UPDATED : பிப் 04, 2025 09:11 PM

ADDED : ஜன 26, 2025 08:09 AM

Google News

UPDATED : பிப் 04, 2025 09:11 PM ADDED : ஜன 26, 2025 08:09 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, கவர்னர் ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக, கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

நாடு முழுவதும் 76வது குடியரசுத் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முக்கிய அதிகாரிகளை கவர்னருக்கு முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவப்பட்டது. தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ரவி ஏற்றுக்கொண்டார். சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னையில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us