UPDATED : பிப் 19, 2024 03:56 PM
ADDED : பிப் 19, 2024 10:25 AM

சென்னை: சட்டசபையில் தமிழக பட்ஜெட் இன்று(பிப்.,19) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டில்லி புறப்பட்டு சென்றார். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. ஆனால் கவர்னர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடப்பு ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று(பிப்.,19) திடீரென 4 நாள் பயணமாக விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. டில்லியில் இருந்து வரும் பிப்.,22ம் தேதி கவர்னர் சென்னை திருப்புவார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

