ADDED : மார் 05, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:''நாட்டின் வளர்ச்சிக்கு முன்னோடிகளாக நம் இளைஞர்கள் திகழ்கின்றனர். உலக அளவில் தலைவராக நம் நாட்டு இளைஞர்கள் உருவெடுப்பர்,'' என, டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா பேசினார்.
புதுடில்லி இந்திரபிரஸ்தா பல்கலையில் 16வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
மாணவர்களுக்கு பட்டம் வழங்கி துணைநிலை கவர்னர் சக்சேனா பேசியதாவது:
இளைஞர்கள் தங்களின் திறனையும், அறிவையும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். நம் நாட்டு இளைஞர்கள் முன்னோடிகளாக திகழ்கின்றனர். உலக அளவில் தலைவராக நம் நாட்டு இளைஞர்கள் உருவெடுப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.

