sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'பாட்டிகளின் வடை கடை வரலாற்றில் மட்டுமே இருக்கும்'

/

'பாட்டிகளின் வடை கடை வரலாற்றில் மட்டுமே இருக்கும்'

'பாட்டிகளின் வடை கடை வரலாற்றில் மட்டுமே இருக்கும்'

'பாட்டிகளின் வடை கடை வரலாற்றில் மட்டுமே இருக்கும்'


ADDED : ஜூலை 30, 2025 04:52 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'கிராமங்களில் இட்லி, டீக்கடைகளுக்கு கட்டாய உரிமம் பெறுவது, ஏழைகள் மீதான தாக்குதல்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:



தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லி கடை, டீ கடை உள்ளிட்ட 48 வகையான உற்பத்தி தொழில்கள்; தையல், சலவை கடைகள் போன்ற 119 வகையான சேவை தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வாழ்வாதாரத்திற்கான தொழில், வணிகத்திற்கு உரிமம் பெற வேண்டும் என்பது, ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்.

கிராமங்களில் வீட்டின் ஒரு பகுதியில் டீக்கடை, பெட்டிக்கடை வைத்திருப்பர். ஆதரவற்ற மூதாட்டிகள், இட்லி, வடை சுட்டு விற்பர். இதற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது பெரும் அநீதி.

வீடுகளில் சிறிய அளவில் நடத்தப்படும் பெட்டிக்கடை, இட்லிக்கடை ஆகியவற்றுக்கு உரிமம் பெறப்பட்டால், அந்த வீட்டுக்கான மின் இணைப்பை, வணிக இணைப்பாக மின் வாரியம் மாற்றும்.

இந்த உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், 'பாட்டிகளின் வடை கடைகள்' வரலாற்றில் மட்டுமே இருக்கும். எனவே, கிரா மப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில் சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை, தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us