ADDED : பிப் 12, 2026 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மத்திய ஜி.எஸ்.டி., துறையின் சென்னை தெற்கு ஆணையராக இருப்பவர் மாணிக்கவேல். இவர், அந்த பதவிக்கு கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்த ஆணையரகத்தில் வடபழனி, தி.நகர் உள்ளிட்ட 11 மண்டலங்கள் இயங்குகின்றன. ஜி.எஸ்.டி., வரி செலுத்துவோரிடம் மாணிக்கவேல் லஞ்சம் கேட்பதாக, டில்லியில் உள்ள மத்திய நிதித் துறைக்கு புகார்கள் சென்றன.
இது தொடர்பாக ரகசிய விசாரணை மேற்கொள்ள ப்பட்டது. மாணிக்கவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப் பட்டு உள்ளது.

