sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குளச்சல் அருகே கரை ஒதுங்கிய கன்டெய்னரை குஜராத் குழு ஆய்வு

/

குளச்சல் அருகே கரை ஒதுங்கிய கன்டெய்னரை குஜராத் குழு ஆய்வு

குளச்சல் அருகே கரை ஒதுங்கிய கன்டெய்னரை குஜராத் குழு ஆய்வு

குளச்சல் அருகே கரை ஒதுங்கிய கன்டெய்னரை குஜராத் குழு ஆய்வு

1


ADDED : மே 31, 2025 12:29 AM

Google News

ADDED : மே 31, 2025 12:29 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில் : கேரள கடற்பகுதியில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து கரை ஒதுங்கிய கன்டெய்னர் மற்றும் கழிவுப்பொருட்களை குஜராத்தில் இருந்து வந்த சிறப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து மே 24 ல் கொச்சித்துறைமுகத்திற்கு புறப்பட்ட சரக்கு கப்பல் 640 கண்டெய்னர்களுடன் ஆழ்கடலில் மூழ்கியது. இதில் சில கன்டெய்னர்களும் கழிவுப்பொருட்களும் கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிக்கு வந்தன.

கொல்லங்கோடு அருகே இரவி புத்தன்துறை, பூத்துறை, இனையம், சின்னத்துறை கடற்கரை பகுதிகளில் சாக்கு மூடைகள் கரை ஒதுங்கியது. குளச்சல் அருகே வாணியக்குடி கடலில் ஒரு கன்டெய்னர் கரை ஒதுங்கியது.

இந்த பொருட்களின் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது.

இவற்றை ஆய்வு செய்ய குஜராத்தில் இருந்து எட்டு பேர் கொண்ட சிறப்பு குழுவினர் நேற்று காலை கன்னியாகுமரி வந்தனர். இவர்கள் வாணியக்குடியில் கரை ஒதுங்கிய கன்டெய்னரை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கரை ஒதுங்கிய கழிவுப்பொருட்கள், கண்டெய்னர்களை அகற்ற முழுவீச்சில் பணிகள் நடப்பதாக கலெக்டர் அழகுமீனா தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us