sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விவாகரத்து வழக்கில் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி செப்., 25ல் ஆஜராக உத்தரவு

/

விவாகரத்து வழக்கில் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி செப்., 25ல் ஆஜராக உத்தரவு

விவாகரத்து வழக்கில் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி செப்., 25ல் ஆஜராக உத்தரவு

விவாகரத்து வழக்கில் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி செப்., 25ல் ஆஜராக உத்தரவு

1


ADDED : ஏப் 05, 2025 02:28 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 02:28 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி ஆகியோர், செப்டம்பர், 25ல் ஆஜராகும்படி, சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், 2013ம் ஆண்டு, தன் பள்ளித்தோழியும், பிரபல பின்னணி பாடகியுமான சைந்தவியை காதலித்து மணந்தார். 12 ஆண்டு கால திருமண உறவில், திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர்.

கடந்தாண்டு பிரிவதாக அறிவித்தனர். பின், பரஸ்பரம் விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், மார்ச், 24ல் நேரில் ஆஜராகி, மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை கோப்புக்கு எடுத்துக்கொண்ட, முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.செல்வசுந்தரி, செப்டம்பர், 25ம் தேதி இருவரும், நேரில் ஆஜராக உத்தரவிட்டார். அன்றைய தினம் இருவரும் நேரில் ஆஜராகும் பட்சத்தில், விவாகரத்து வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us