எச்.ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு: அப்பல்லோ மருத்துவமனை தகவல்
எச்.ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு: அப்பல்லோ மருத்துவமனை தகவல்
ADDED : ஜன 31, 2026 07:17 PM

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு, பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று , தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில், எச்.ராஜா பங்கேற்றார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அவரை உடனடியாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
டாக்டர்களின் பரிந்துரைப்படி, மேல் சிகிச்சைக்காக, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையின் மருத்துவ சேவை இயக்குநர் அனில் பி.ஜி., வெளியிட்டுள்ள அறிக்கை:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எச்.ராஜாவுக்கு, பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறவினர்கள், நண்பர்களுடன் பேசக்கூடிய வகையில் நலமுடன் உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

