sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயில் பறிமுதல்: 3 கடைகளுக்கு சீல்!

/

முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயில் பறிமுதல்: 3 கடைகளுக்கு சீல்!

முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயில் பறிமுதல்: 3 கடைகளுக்கு சீல்!

முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயில் பறிமுதல்: 3 கடைகளுக்கு சீல்!

4


UPDATED : பிப் 12, 2025 10:34 AM

ADDED : பிப் 12, 2025 10:33 AM

Google News

UPDATED : பிப் 12, 2025 10:34 AM ADDED : பிப் 12, 2025 10:33 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஈரோட்டில், மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 1.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, முயல் ரத்தம் கலந்த, 7 ஹேர் ஆயில் பாட்டில்களை மருந்து ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் உள்ள கடைகளில் முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயில் விற்பனை செய்வதாக மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்துக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

சோதனை முடிவில், மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 1.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, முயல் ரத்தம் கலந்த, 7 ஹேர் ஆயில் பாட்டில்களை மருந்து ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர். அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்ய, கடைகளுக்கு உரிமம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்த கடைகளில் எண்ணெய் இருப்பு வைத்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். ஆனால் அவற்றை விற்க உரிமம் இல்லை. ஹேர் ஆயில் ஒரு அழகுசாதனப் பொருள் ஆகும். இது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தில் வருகிறது. ஹேர் ஆயில்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் உரிமம் கட்டாயம்.

பறிமுதல் செய்யப்பட்ட முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயிலை ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம். ஆய்வக அறிக்கையின் அடிப்படையில்,நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us