sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விடுதலை சிறுத்தைக்கு வந்து விட்டதா வீரம்?

/

விடுதலை சிறுத்தைக்கு வந்து விட்டதா வீரம்?

விடுதலை சிறுத்தைக்கு வந்து விட்டதா வீரம்?

விடுதலை சிறுத்தைக்கு வந்து விட்டதா வீரம்?

28


ADDED : அக் 07, 2024 02:38 PM

Google News

ADDED : அக் 07, 2024 02:38 PM

28


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திமுகவைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகளின் பெரியண்ணன் மனப்பான்மையில் நடந்துகொள்ளும். திமுக அரசின் திட்டங்கள், குறைகளை கூட்டணி கட்சிகள் கேள்வி கேட்காமல், ‛‛ஆமாம்'' போட வேண்டும் என்று எதிர்பார்க்கும்.

திமுக கூட்டணியில் எப்போதும் ‛‛துண்டு போட்டு'' வைத்திருக்கும் காங்கிரஸ். விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், மதிமுக போன்றவையும் ‛‛ராஜ விசுவாசத்துடன்'' நடந்துகொள்வர். ஆனால் இம்முறை மட்டும் கூட்டணி கட்சிகளில் வி.சி.,க்கு மட்டும் கொஞ்சம் வீரம் வந்துள்ளது போல. அவ்வப்போது ஏதாவது ஒரு வெடியை கொளுத்திப் போட்டுக்கொண்டு இருக்கிறது.

அதிர்ச்சி வைத்தியங்கள்


-----------------------

வைத்தியம் 1:

தாங்கள் நடத்திய மது ஒழிப்பு மாநாடுக்கு எதிர்க்கட்சியான அதிமுகவையும் அழைத்து திமுகவுக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது வி.சி.,

வைத்தியம் 2:

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்லி திமுக அரசின் அடிமடியில் கை வைத்தது..

வைத்தியம் 3:

தங்கள் கட்சியின் து.பொ.செ., ஆதவ் அர்ஜூன் மூலம், ‛‛ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு தர வேண்டும்'' என்று சொல்லச் சொல்லி இன்னொரு பட்டாசை வீசியது வி.சி.,

வைத்தியம் 4:

கூட்டணிக்குள் எந்த சிக்கலும் இல்லை என திருமாவளவன் கூறிய பிறகும், கோவை தம்பிகள், ‛‛ஆட்சியில் பங்கு வேண்டும்'' என்று கேட்டு போஸ்டர்களை ஒட்டி, திமுகவை ‛‛ஜெர்க்' ' ஆக்கினர்.

வைத்தியம் 5:

நடந்து முடிந்த சென்னை வான் சாகசத்தில் 5 பேர் இறந்ததற்கு திமுக அரசை திருமாவே கண்டித்துள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என விசாரித்து அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

அதாவது, திமுக அரசின் முன்னேற்பாடு நடவடிக்கைகள் சரியில்லை என்பதை நேரடியாக சொல்லாமல், கொஞ்சம் பூசி மெழுகி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், அர்த்தம் எல்லாம் ஒன்று தான்.

திருமா மட்டும் அல்ல, அவரது கட்சி து.பொ.செ., ஆதவ் அர்ஜூனும், ‛‛மாநில அரசின் கவனக்குறைவால் சாகசம் சாதனையாக அல்லாமல் வேதனையாகிவிட்டது'' என்று கூறியுள்ளார்.

(துாத்துக்குடி எம்.பி., கனிமொழியும் வான் சாகச நிகழ்ச்சி ஏற்பாட்டில் செய்யப்பட்ட சொதப்பல்களுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்)

ஆக, திமுகவின் மிகவும் நம்பிக்கையான கூட்டாளி என்று இதுவரை கருதப்பட்ட ‛‛சிறுத்தைகளுக்கு'' இப்போது தான் வால் ஆட ஆரம்பித்துள்ளன. விரைவில் தலையும் ஆடும். இப்போதாவது திருமாவளவன் உண்மையை பேசி உள்ளாரே'' என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.






      Dinamalar
      Follow us