ADDED : ஏப் 02, 2025 10:56 PM

தொண்டாமுத்தூர்:கோவை ஈஷா யோகா மையத்தில், இந்திய கடற்படை வீரர்களுக்கு, அளிக்கப்பட்டு வந்த பாரம்பரிய ஹத யோகா பயிற்சி நிறைவு பெற்றது.
ஈஷா மையத்தில் பாதுகாப்பு படைகளுக்கான பாரம்பரிய ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களாக இந்திய கடற்படை வீரர்களுக்கு, ஹத யோகா பயிற்சி அளீக்கப்பட்டது.
ஹத யோகாவின் பிரிவுகளான உபயோகா, அங்கமர்தனா, சூரிய க்ரியா பயிற்சிகள் பெற்ற வீரர்கள், கடற்படை முகாம்களில் உள்ள சக வீரர்களுக்கும், இந்த ஹத யோகா பயிற்சியை அளிக்கின்றனர்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய பாதுகாப்பு படைகளுக்கான, பாரம்பரிய ஹத யோகா பயிற்சியை வெற்றிகரமாக முடித்த, 72 கடற்படை வீரர்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் தேசத்துக்கு உயர்ந்த சேவையை வழங்கும்போது, உங்கள் உடலும், மனமும் நீங்கள் நினைக்கும் விதத்தில் செயல்படுவது மிக முக்கியம். ஹத யோகா உங்களுக்கு எந்தச் சூழ்நிலையையும் சமநிலை மற்றும் தெளிவுடன் கடந்து செல்ல தேவையான வலிமையையும், உறுதியையும் அளிக்கும்,”என, கூறியுள்ளார்.

